Friday, April 30, 2010

இன்று மழை நாள் மாலை...

பூ விழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே!
இளம் கிளியே கிளியே
மெல்ல வராலாம் இனியே
இனித் தொடலாம் என்னையே...
அரும்பான காதல் பூவானது அனுபவ சுகங்களைத் தேடுது.
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை.
கார் மேகமோ குழலானது ஊர்கோலமாய் அது போகுது.
மலை வாழைத் தென்றல் தாலாட்டுது.
மரகத இலைத் திரை போடுது.
கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ
கலை இது அறிமுகம் வேண்டுமோ?
- இன்னும் ஏழெட்டு வரிகள் இந்தப்பாட்டில் உள்ளன.எனக்கு உயிராய்ப்பிடித்த பாடல்.பாட்டுக்கேட்டுக்கொண்டே தட்டுகிறேன்.பாட்டின் வேகத்துக்கு தட் ‘டச்’ ச முடியவில்லை. என்ன படம்? பாடியது யார் என்று தெரியவில்லை.(பின்னூட்டத்துக்கு மனுஷன் என்னவெல்லாம் வேலை பண்ண வேண்டியிருக்கிறது.)

4 comments:

நேசமித்ரன் said...

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

(பூவிழி வாசலில் யாரடி…..)

அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுதே
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

(பூவிழி வாசலில் யாரடி…..)

இள மாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ
எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

(பூவிழி வாசலில் யாரடி…..)

கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ
கலை இது அறிமுகம் வேண்டுமா
அசைந்தாடும் கூந்தல் நாமாக
நவரச நினைவுகள் போதுமா
பூமேனியோ மலர் மாளிகை
பொன்மாலையில் ஒரு நாளிதே
நாளும் நான் ஆடவோ
அணைக்கும் துடிக்கும் சிலிர்க்கும் மேனி

(பூவிழி வாசலில் யாரடி…..)

படம் : தீபம்
பாடியவர்: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி
வரிகள்: புலமைபித்தன்

பின்னூட்டம் போட்டாச்சு அண்ணே !

:)

நேசமித்ரன் said...

http://www.youtube.com/watch?v=BePtCZrCOLg

காணொளி சுட்டி

Indian said...

படம் : தீபம்
பாடியவர்: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி
வரிகள்: புலமைபித்தன்

Balakumar Vijayaraman said...

படமும் தெரியாது, பாட்டும் தெரியாது, இருந்தும்பின் ஊட்டுவோம் :)