Tuesday, November 8, 2011

நிலா நாற்பது -20

வானில் உழுது தேயும்
வட்டக் கலப்பை.
விண்
மீனில் பெற்று மீளும்
விட்ட இழப்பை.

Sunday, November 6, 2011

ஈத் முபாரக்!

பெங்களூரில் இருந்தவாறு பக்ரீத் கொண்டாட்டம். கடந்த ரெண்டுமூணு நாட்களாகவே விதவிதமாகக் கொழுத்த ஆடுகள் காட்சிக்குக் கிடைக்கின்றன. சாலையோரங்களில் புதிதாகப் புல் விற்போர். ஆடுகளைக் கையில் பிடித்தபடி முசல் மான்கள்.

சிலபோது ஆடுகளைக் கயிற்றால் பிடித்தபடி அஞ்சுவயசுப் பிஞ்சுக் குழந்தைகள் நிற்பது அற்புதமான காட்சி. இன்று மழை வெறித்திருக்கிறது: வெய்யில்.

கிராமத்தி்னை நினைவிற்கொண்டுவருமாறு ஆடுகளின் நடமாட்டம் நாளையிலிருந்து கம்மியாகிவிடும். பால் வெள்ளை ஷெர்வானிகளுடன் தலைத் தொப்பிகளுடனும் அத்தர் வாசத்துடன் எம் தெருவைக் கடந்து ஆண்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

அறுநூறு மீட்டர் தொலைவிலாக அடுத்த தெருவில் மசூதி.
இதோ இதோ ஒலிக்குது கேளிர்...
அல்லாஹு அக்பரல்லா....

பக்ரீத் வாழ்த்துக்கள்!