Monday, November 30, 2009

முகிழ்த்தல்

எரியும் உருகும்
ஒரு பொருள் எனது
இதயமாக இருக்கலாம்.
சுடரில் வடிவுறும் சலனம்
நின் முகமாகும் ஆதலின்
கற்பூரம் கமழ்கிறது
ஆராதனை முற்றத்தெங்கும்.
பற்றற்றுக் கிடந்தேன்
நேற்றது வரை.
நேற்றுப் போகிற போக்கில்
ஓரக்கண் பார்த்து
ஒரு பூப் பூத்தது.

(நன்றி;ஆனந்த விகடன்)

5 comments:

நர்சிம் said...

மிகப் பிடித்திருந்தது இந்தக் கவிதை.

hiuhiuw said...

ஹாய்!

நேசமித்ரன் said...

ஓரக்கண் பார்த்து
ஒரு பூப் பூத்தது.

ஸ்ரீராம். said...

பூமியில் பூக்கும் ஆயிரமாயிரம் பூக்களில் நம் பூ எது?

Nathanjagk said...

அக்கா.. க்கா.. யக்கா... நான் ​பேசறது ​கேக்குதா??? அண்ணன் இங்க என்ன பண்ணறாருன்னா...... அ​லோவ்.. ​லோவ்... வ்..!