Thursday, May 6, 2010

இல்லாமல் உள்ளது.

நினையாமல் இருக்கையில்
மறந்திடக் கூடிய ஒன்றுதான்.
இழப்பை உணர்கையில் பூ ரணம்.
திளைத்து இருக்கையில் பூரணம்.

இன்று வேறொன்றினைப்
பெற்ற பின்னும் எதிரெண்ணாமல்
முகங்கொள்ளும்
இழக்கப்பெற்றதின் சிறுவலி.
புறக்கணிப்பின் பெருவலி.

சுள்ளிமுள்ளுக் காட்டினிலே
கள்ளிப்புதர் உள்ளடுக்கில்
உள்ளது உன் பெயரே!

3 comments:

பத்மா said...

இன்று வேறொன்றினைப்
பெற்ற பின்னும் எதிரெண்ணாமல்
முகங்கொள்ளும்
இழக்கப்பெற்றதின் சிறுவலி.
புறக்கணிப்பின் பெருவலி.

இழந்தது தான் பெரியதாகத் தோன்றும் .மனிதரியல்பு .அந்த இழப்பின் வேதனை தான் வாழ்கையின் ருசி .அழகான கவிதை சார் .

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//நினையாமல் இருக்கையில்
மறந்திடக் கூடிய ஒன்றுதான்//
அண்ணா,நல்ல வரிகள்..நல்ல கவிதை

நேசமித்ரன் said...

சுள்ளிமுள்ளுக் காட்டினிலே
கள்ளிப்புதர் உள்ளடுக்கில்
உள்ளது உன் பெயரே//

:)