Wednesday, July 27, 2011

ரவிச் சந்திரன்

நடிகர் ரவிச் சந்திரன் முதுமை மற்றும் நோய்கள் காரணமாக மரணமடைந்திருக்கிறார். சென்ற தலைமுறையினரை தனது செல்வாக்காலும் - ஸ்டைலாலும் ஓரளவு பாதித்தவர் என்றால் அது மிகையில்லை. ரவிச் சந்திரனுக்கு அழகான கண்கள். அதனால்தானோ என்னவோ அதே கண்கள் மற்றும் ஊமை விழிகள் என அவருக்குப் பேர் சொல்லும்படி அமைந்துவிட்டன.

ரவிச்சந்திரன் அறிமுகமானது ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில். ‘விஸ்வநாதன் வேலை வேணும்’ என அவர் போட்ட கெட்ட ஆட்டம் மறக்கமுடியாதது. புகழுச்சிக்குப் பின் கிணற்றில் போட்ட கல்லாக அவரது மௌனம் திரை வாழ்வில் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது. எனினும் தனித்துவமான நடிகர்தான் அவர்.

அவர் சினிமாவில் தேர்வு பெற்றது பற்றி சுவாரசியமான செய்தி ஒன்று உண்டு. எவ்வளவு தூரம் அது மெய் எனத் தெரியவில்லை. அதாவது முதலாம் சந்திப்பில் ’நீங்கள் தேர்வு பெறவில்லை’ என ஸ்ரீதர் சொன்னதும் ‘’அப்படியா’’ என்று கேட்டுவிட்டு சாவதானமாக சிகரெட் பற்ற வைத்திருக்கிறார். அதுதான் டீலிங் முடிஞ்சு போச்சே இனி என்ன மரியாதைகள் வேண்டிக்கிடக்கு என்கிற தொனியில் அவர் சிகரெட் பற்ற வைத்த விதம் ஸ்ரீதருக்கு பிடித்துப்போக அந்தக் கணமே ஒப்பந்தமானார் ரவிச்சந்திரன். ஒருவேளை பொய்யாக இருந்தாலும் இந்தச் செய்தியை அமரர்களான ஸ்ரீதர் மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் ரசிக்கக் கூடும்.

மிக நீண்ட தசாப்தங்களில் ரஜினிகாந்த்தின் தந்தை  வேடத்தில் ரவிச்சந்திரனை யாரும் யோசிக்கவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

3 comments:

நெல்லை கபே said...

அதுதான் அருணாசலம் படத்துல வளர்ப்பு அப்பாவா நடிச்சாரே!

கிருபாநந்தினி said...

ரவிச்சந்திரன் ஒரு நல்ல நடிகர். இந்தப் பக்கம் சிவகுமார், அந்தப் பக்கம் ஜெய்சங்கர்னு இருவருக்கும் நடுவிலான நடிகர். சிவாஜி, எம்.ஜி.ஆர். ரெண்டு பேருக்கும் உள்ள அளவு இல்லாட்டாலும், ஜெமினிக்கும் அதிக ரசிகர் கூட்டம் இருந்தது உண்மை. ஆனா, ஜெய், சிவகுமார் இவர்களுக்குண்டான ரசிகர் எண்ணிக்கையோ, பேரோ புகழோ ரவிச்சந்திரனுக்கு இல்லாம போனதுக்கான காரணம்தான் என்னன்னு புரியலேண்ணே!

koththukkaaran said...

chinna mgr ena azhaikkapattar.thruchiyai searntha
velinattuthamilar.raman.unmaipeyar.
nallavivasaaye.umaivizhikalil re endry.nallakuralukkkkusonthakkaarar athika kalar padankalil nadithavar.malayaala nadikai shilavaimananthavar.......