Tuesday, July 19, 2011

சில கனவுகள் சமீபத்தியவை

போன வாரத்தில் இரவில் ஒரு கனவு, இரண்டு நண்பர்கள் என்னைச் சந்திக்கிறார்கள்.
ஒருவர், பாம்பு பிசினெஸ் நல்லா இருக்கும் என்கிறார்.அதைச் செய்யலாம் என முடிவெடுத்து மற்றொரு நண்பரிடம் சொல்ல அவரும் நானும் பாம்பினைப் பிடிக்கிறோம்.

 பாம்பை பரிசுப் பெட்டி அளவுக்கு பொதிந்து ஆட்டோவில் ஏற்றினால் பொட்டலம் பெருத்துக் கொண்டே போகிறது. மிலிட்டரிக் காரர்களின் படுக்கையுடன் கலந்த சாமான் பொதி போல வீங்கிக் கொண்டே போகிறது. நல்லவேளையாக அது பெருத்து வெடிப்பதற்குள் விழிப்பு வந்துவிட்டது. விழிப்பு வந்ததற்குப் பிறகு திகைத்துப் போனேன். ஏனெனில் கனவில் வந்த இருவர்... ஒருவர் ப.கவிதா குமார் மற்றவர் பா.ராகவன்.

இனிஷியல்களுக்கும் (பாக்கள் வரும் பாம்பு) கனவுகளுக்கும் சம்பந்தம் உண்டா என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் நேற்றிரவின் கனவில் கலாப்ரியா வந்தார். காலையில் எழுந்து சிற்சில வேலைகள் முடிந்த பின் பகல் தூக்கம் போட்டேன். தூக்கத்துக்கு முன் நாளிதழ் பார்த்து ‘சமச்சீர் கல்வி’ குறித்த ஹை கோர்ட் தீர்ப்பைப் படித்திருந்தேன்.

இன்றைய காலைக் கனவில் ஒரு டுவெண்டி டுவெண்டி மேட்ச் நடக்கிறது. அணிக்கு நாலு பேர். எங்கள் அணி பவுலிங் 16 ஓவர் வரை ஒருத்தரும் அவுட் ஆகவில்லை. என் பள்ளிக் கால நண்பன் பெரிய சாமி மட்டுமே தொடர்ந்து பந்து வீசுவதில் கடுப்பாகி நான் வெளியேருகிறேன். ஒரு மாநாட்டுப் பந்தல் இரண்டு சினிமா தியேட்டர்கள் கடந்து வந்தால் ஒரு சாமியான பந்தலின் கீழ் சோபாவில் கருணா நிதி அமர்ந்திருக்கிறார். அவருக்கு ஐந்தடி தொலைவில் நான் நிற்கிறேன். என்னை எதோ கேட்கிறார். இதற்கிடையில் அவரது போட்டோவை எதோ குறிப்பெழுதும் தாளாகப் பயன் படுத்தி அது நான் கொண்டு போன கச்சாத்துகளில் மேலாகக் கிடக்கிறது. அதை அவர் கவனித்துவிடக் கூடாது எனப் பதைப்புடன் இருக்கிறேன்.

அவர் வலியுறுத்தல் பேச்சின் ஊடாக என் மகள் அவரைப் பற்றி எழுதிய கவிதையைக் காட்டுகிறேன். பசி தாளாமல் கனவின் தொடர்ச்சி கலைந்துவிட்டது. ரிலேட்டடான கனவுகள் வருவது எப்போது நிற்குமெனத் தெரியவில்லை. ஆனால், ‘கலைஞர் முதல் கலாப்ரியா வரை’ என எப்போதோ படித்த தலைப்பு இப்படி மெய்ப்படும் என எதிர் பார்க்கவேயில்லை.

3 comments:

sankeethasenkodan said...

nampi kooda taasmack baril thanniadippathu pola kanavu onnum varaliya bass?

sangeetha senkodan said...

nila...ethir kavithai.


aakaaya thosaikkallil yaar sutta
vooththaappam.
nilaathattil potta sotrai enthak
kuzhanthai eppadi eraiththathu.natsaththirankal.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

superb