Friday, July 23, 2010

பட்டணம் - பாட்டுகளூம் பாடூம்

மதராச பட்டணத்தில் (அதாவது திரைப்படம் பற்றி முதலில் பேசுவதாயின் எடுத்தோர் விருப்பப்படி மதராசப் பட்டனம் என எழுதணும்) பாட்டுகள் எப்படி என பத்மா வினவியிருந்தார். பாடல்களில் அபாரமான வரிகள் இருந்ததாக கேட்கும் போது தோன்றியது. நினைவாற்றல் குறைவு அல்லது மறுபடி மறுபடிக் கேட்காமை ஆகிய காரணங்களால் அவற்றை நினைவு கூரமுடியவில்லை.தோய்தலுக்கான வாய்ப்பும் அமையவில்லை. ஆராய்ச்சி செய்யும் வண்ணமான லௌகீக சரத்தும்  அதிலெனக்கு இல்லை. இப்ப எனக்கு மனதில் நிற்பது ‘மேகமே! மேகமே! கொஞ்சம் போயிட்டு நேரஞ்செண்டு வா’ அப்படிங்கிற பாட்டு . அதை எடுத்திருந்த விதமுமே நல்லா இருந்தது.

சென்னையில் மற்றும் தமிழ்நாட்டுல எங்கேயும் இப்ப பரவலான கருத்துக் கவர்ந்த விஷயம் போலி மதிப்பெண் அட்டைகள்தான். இதில் நடுத்தரச் சமுதாய மாணவர்கள் பலபேர் மாட்டிக்கொண்டார்கள்.+2 வில் ஆயிரம்மதிப்பெண்ணுக்குக் கீழே வாங்குகிறனெல்லாம் செத்தே போய்விட வேண்டும் என்பதான மனக் கிறுக்கு பெற்றோரிடம் உள்ளது. மொத்தக் கூகையனுகளும் இப்படி இருந்தால் இது என்ன இதுமாதிரி பலநூறு அபத்தங்களும் அழிமதியும் சமூகத்தில் பெருகித்தீரும். பேசித்தீராது.

பாருங்கள் பல ஊழல்களைத் தோலுரித்து உப்புக்கண்டம் போட்டவர் என பேரும் புகழுலுமாக விளங்கிய உமாசங்கர் ஐ.ஏ.எஸ் . போலிச் சான்றிதழ் காட்டிப் படித்தார் என சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார்.அப்புறம் பூவழகியோ பூவரசியோ எதோ ஒரு பொண்ணு அதுவும் கலெக்கடர் கனவில் உழன்று மதி புரண்டவள் போல்தான் இருக்கிறது. சின்னப் பையனைக் கொன்றுவிட்டு ஜெயிலில் சக கைதிகள் கிட்ட அடிவாங்குகிற நிலைக்குப் போய்விட்டாள்.

ஆகவே இந்தக் கலிகாலத்தில் இப்படியான சென்னைப் பட்டணத்தில் தற்சமயம் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் எனக்கு எழுதப் படிக்கத் தெரியும் என நம்புகிற நண்பர்கள் எழுத்து அல்லது காட்சி ஊடகங்களில் வாய்ப்பு இருப்பின் தெரிவிக்கலாம்.எனது அலை பேசி எண் ;
8973194399.

இதனை ஒட்டித் தொடர்பு கொள்வோர் பிளாக்கை பற்றி விமர்சிக்கவேண்டாம் என்றும் அதிலும் குறிப்பாக பாராட்டவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனெனில் .....
முடியல..

(கட்டுரைக் கடைசியை  வைகைப்புயல் வடிவேலுவின் தொனியில் வாசிக்கவும்)

No comments: