Monday, July 19, 2010

பட்டணம்... பயில்வான்கள்

எவ்வளவோ வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் இரண்டு திரைப்படங்கள் பார்த்தேன். ஒன்று மதராசப் பட்டணம் மற்றது தேனாண்டாள் பிலிம்ஸ் மொழி மாற்றி வழங்கிய 'உலக நாயகன்' (காற்றைக் கடைசியாய் வளைக்கும் ஒருவன் - என்கிற மாதிரி பொருட் தலைப்பு உடைய படம்) .


உலக நாயகன் படத்துக்குக் குழந்தைகளைக் கூட்டிப் போனால் மகிழ வைக்கலாம்.மதராசப் பட்டணம் வேறு சில வகைகளில் கவர்ந்தது.கவித்துவமான சில காட்சிகளில் புல்லரித்தேன். கவர்னரின் பெண் கழுதை வைத்திருக்கும் வண்ணார் பையனைக் காதலிக்கிறாள்.
அதைவிட வண்ணார்கள் அவ்வளவு பெரும் கொழுக் மொழுக் என இருந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. குஸ்தி சண்டை பயில்வான்கள் வேறு அவர்களில் பலர் இருந்தனர். காதலன் படத்திலாவது காக்கிநாட காக்கர்லா பொண்ணுதான் கான்ஸ்டபிள் மகனைக் காதலிக்கிறாள். இதில் வெள்ளைக் காரக் கவர்னர் பெண்ணே நம்ம பையனைக் காதலிக்கிறாள். அப்புறம் டைட்டானிக் மாதிரி நினைவுச் சின்னம் ஒன்று . மொத்தத்தில் ஒரு பத்துப் பதினைந்து படத்தை நினைவு படுத்துவதால் நமது ஞாபக சக்தியை சோதித்துக் கொள்வதற்காகவாவது அவசியம் படத்தைப் பார்ப்பது நல்லது.

4 comments:

பத்மா said...

paatellam eppidinga?

SIVA said...

”ம.பட்டணம்” படத்தைப் பற்றி ரொம்ப நாசூக்கா சொல்லியிருக்கீங்க!

Anonymous said...

see Kalavaani movie.Nice one

வவ்வால் said...

Anna ,

neenga orutharavathu madarasa pattinam pathi unmaiya sonningale!

enakkum athe than thonichu, aanaal intha pathivulaga makkalo aha,oho solluchu, oru velai namakku than "rasamattamo" ena ninaithen, but neenga ennai kaappathitinga!