Friday, January 28, 2011

உ(க)ள்ளக் காதல்

நேற்றைய தினமலரில் ஒரு செய்தி கள்ளக் காதலர்கள் தற்கொலையைப் பற்றியது. வெளி நாட்டில் கணவன் வாழும் மனைவியுடன் இங்கிருக்கும் ஒருவருக்கு காதல். இங்குள்ளவருக்கும் மனைவி இருக்கிறார். இந்நிலையில் காதலன் வீட்டுக்கு காதலி தேடிச் செல்கிறார். வீட்டிலிருந்த மனைவி கோபித்துக்கொண்டு சண்டைபிடித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்.

காதலன் காதலி இருவரும் தூக்கில் தொங்குகின்றனர்.காதலன் மரணம்.காதலி உயிர் ஊசல். இது செய்தி. செய்தியை கணினி வழிப் படித்த நான் அதற்கு வந்த ஒரு பின்னூட்டத்தையும் படித்தேன்.

பின்னூட்டம் மலேசியா - ‘கில்’லாங் கிலிருந்து வந்திருந்தது. ‘சாவட்டும் உடுங்க’ என்பதுதான் பின்னூட்டம். அனுப்பியவரின் பேரைப் பார்த்தேன். வாசுதேவன் என்றிருந்தது. நல்லவேளை ‘சாவு தேவன் ‘ என்றில்லாதது குறித்து சற்றே ஆறுதலடைந்தேன்.

No comments: