Monday, December 7, 2009

முழுமை

கருக்கொண்டு பருத்திரண்டு
முற்றுமதன் அங்கங்கள்
உருவாகி உலவுலாவி
அசைந்தும் புரண்டும்
நகர்ந்தும் எழுந்தும்
நீண்டோ உயர்ந்தோ
குறுக்கிற் பெருத்தோ
உயிரென்னும் பெயரில்
உலவிடும் ‘விந்தை’.
ஓருயிர் முதலாம் ஆறுயிர்
உயிரிடை ...அளவிற்
சிதைந்தும் ஆக்கலிற்
கலைந்தும் பாதியிற்
போதல் பகரவும்
துக்கமாம் பாவியேன்
சொற்களில்...

8 comments:

Rajan said...

:-)

நேசமித்ரன் said...

வலியதான் எவ்வளவு அழகா சொல்றீங்கண்ணே

Unknown said...

nice siva

க. சீ. சிவக்குமார் said...

கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள்- பூரணமாய்.பரிபூரணமாய்,சம்பூர்ணமாய்..க.சீ.சிவகுமார்.

க. சீ. சிவக்குமார் said...

கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள்- பூரணமாய்.பரிபூரணமாய்,சம்பூர்ணமாய்..க.சீ.சிவகுமார்.

Nathanjagk said...

உயிரை ஒரு துளி விந்து என்று பார்க்கும் மனத்திடம் திடுக்கிடுகிறேன்! வித்யாசமான அனுபவம்!
சிதை / கலை ​துக்கங்கள் மனதிலும் பாவியிருக்கின்றன!

adhiran said...

என்னே விந்தை!

Admin said...

நல்ல வரிகள்