Sunday, March 21, 2010

பேறு நல்ல பேறு

என் மீது கோபமா
என்றொரு குரல் கேட்க
மகிழ்ச்சியாக இருக்கிறது
மிக மிக.

ரசனையாளர்கள்
தேர்வாளர்கள்
வேட்டைக்காரர்கள்
துய்ப்பவர்கள்
மிகுந்த

அஃதேயளவு
ஏமாளிகளும்
கற்பனாவாதிகளும்
இழப்பாளர்களும்
தற்கொலை விருப்பர்களும்
மலிந்த

பொருண்மை
அழியா உலகில்
கோபமல்ல உன்மீது
பரிதாபம் என்று
எப்படிச்சொல்லுவேன்?

படிச்சுக்கோ எனச்
சொல்லத் தகுதியில்லாத
முட்டாள் மாணவன்.

4 comments:

நேசமித்ரன் said...

:)

Nathanjagk said...

நல்லாயிருக்கு :))

Nathanjagk said...

ண்ணா,
தொடர்புஎண்ணை தெரியபடுத்தவும்.. ​அல்லது மெயில் அனுப்பவும்.

Anonymous said...

வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.