Wednesday, November 3, 2010

திறன்....எந்திரன்

ரஜினி தெறம காட்டிய எந்திரன் படத்தினை நான்கு நாட்கள் முன்னால் பார்த்தேன்.அறிவியல் சாத்தியங்களைப் பற்றிப் பேசுவதற்கு முயன்றிருக்கிறது, அறவியல் சாத்தியங்களைக் கொன்றிருக்கிறது படம்.சுஜாதா இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருக்கமாட்டார் படம் பார்த்திவிட்டு.

நிகர் நிலை மனிதனை உருவாக்கும் விஞ்ஞானி வசீகரனாக ரஜினி.(படத்தின் மூல முடிச்சு இது.மூலை மற்றும் மூளை முடிச்சுக்கள் வேறுவேறு.அதைப் பற்றி இங்கு நான் பதியப்ப்போவதில்லை.) அந்த ரோபோட்டை தேசப் பாதுகாப்புக்காக அனுப்புவது வசீகரனின் எண்ணம்.அதுபோன்ற ஆயிரக் கணக்கான வீர உருக்களை உருவாக்கி நாட்டைக் காக்கலாமாம். உயிர்ப் பலிகள் தவிர்க்கப்படுமாம்.

இதில் என்ன ஒரு பிரச்னையென்றால் ஐந்து மணிநேரம் மின்சாரம் தடைபட்டால் நாடு அம்பேல். என்னடா இவ்வளவு அபத்தமா இருக்கே என யோசித்தவாறே படம் பார்த்த என் எண்ணத்தில் சிலிகான் விழுந்தது. நான் படம் பார்த்து முடிகிற வரை கரண்டு போகவேயில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

4 comments:

அதிரை என்.ஷஃபாத் said...

கரண்ட் போகவே இல்லையா? தமிழ் நாட்டிலா இருக்கின்றீர்?

www.aaraamnilam.blogspot.com

க. சீ. சிவக்குமார் said...

அருட்புதல்வன் பெங்களூரில் இருக்கிறேன்

Unknown said...

hi sivakumar, i am kumaran singapore , now in india, i am trying to call u ,please call me 9840880678 or mail me oshoo@sify.com

Anonymous said...

bicentennial man see this movie in youtube