Wednesday, October 27, 2010

நானே என்னுள் இல்லை....

முந்தாநாள் ராத்திரி ஒரு கனவு.

சுவரில் உள்ள போட்டோவிற்கு மாலை சூட்டப்பட்டிருக்கிறது. முன்னே உள்ள மேஜைக்குக் கீழ் நானும் கவுண்டமணியும் பேசிக்கொண்டிருக்கிறோம். அது ஏதோ சினிமாக் காட்சி எடுப்பதற்கான முஸ்தீபு போலத் தெரிகிறது. கவுண்டமணி இயக்குனராக இல்லாத பட்சத்தில் நான் இயக்குனரா கதாசிரியனா இயக்கமா ஆஃபீஸ் பாயா தெரியவில்லை.

சற்று நேரத்தில் வடிவேலு வந்து போட்டோவைப் பார்த்து அழுகிறார்.திருமணத் தரகரான அவர் அப்படி அழுது கொண்டிருக்கும் போதே கவுண்டமணி மறைந்து விடுகிறார். இப்போது போட்டோவில் கவுண்டமணி. பெண் பார்த்து வடிவேலு கட்டிவைப்பார் என எண்ணி எண்ணி ஏமாந்து போன - ஏமாந்து இறந்து போன கவுண்டமணி.

நான் கதவுக்கு வெளியே வர உள் காட்சிகள் மறைந்து போகின்றன. தெருவில் ஒரு குண்டுப் பெண்மணியும் ஒரு பையனும் நடந்து போகிறார்கள்.

கனவு கலைந்து எழுந்துவிட்டேன். என்ன மாதிரியான கனவெல்லாம் வந்து தொலைகிறது என சுய இரக்கம் கவிகிறது. அந்தப் பெண்ணும் பையனும் யார் யார் என யோசித்து இன்று விடை கண்டுவிட்டேன்.

பேசாமல் ஜெயசித்ராவின் மைந்தர் அம்ரேஷ் கணேஷ் நடித்த (படத்தலைப்பே பகிர்வின் தலைப்பும்) படம் பார்த்து இயல்பு வாழ்கைக்குத் திரும்பவேண்டியதுதான்.

No comments: