Saturday, October 1, 2011

இருட்டைச் சூழச் செய்யுதல்

தன் பிரவாகத்திலேயே
ஆதியின் கூற்றில் இருள்
இருந்தது.
படர்ந்தது கனியின் ஒளி
இருப்பிடமறியாத் தேடலினூடே
உயர் துயர் உயிர் தவித்துக்
கண்டடைந்தது நெருப்பினை.
பொருப்பிலும் இருப்பிலும்
தானிருந்த ஒன்றை
கடைந்துரசும் கடுமுயல்வில்
நிலைத்த அது குமிழிற் சேகரமானது.
குமிழிலும் குழலிலும் சேகரமான அதை
மூலத்தின் விருப்ப வேர் தேடி
அணைக்க விரும்புகிறது
அதி ஆதி மனம்.
எதை எதைக் கொண்டு
ஒளியை அணைய.... என
இருட்டில் தவிக்கிறது
இன்றைய மனம்.

2 comments:

jalli said...

" earkanavey rendu munu 'ammanikal"
pazhya earpattai coppi adichu
kavithai ezhuthivaranga.. pothak kuraikku neengalum vera...antha saayalil
ezhuthina thangathu sami.
"unnathappattu' aththiyayam padiunga purium.

Unknown said...

உன்னையே....
நீ..யரிவாய்..ஶ்ரீ