Tuesday, December 14, 2010

அரசியல் வானப்பிரஸ்தம்

கர்நாடகத்தில் பங்காரப்பா காங்கிரஸிலிருந்து மத சார்பற்ர்ற ஜனதாதளம் சென்றுள்ளார். ஞாபக ஆழத்தில் உள்ளே கிடந்த அவரது பெயர் கட்சி மாறியதன் மூலம் மீள் நினைவுக்கு வருகிறது. அப்படி ஒரு செய்தி வராமல் இருந்தால் அவரை நான் இறந்தவர்கள் கணக்கில் வைத்திருப்பேன். நிஜ லிங்கப்பா, தேவராஜ் அர்ஸ், குண்டு ராவ் கணக்கில் அவரையும் வைத்திருப்பேன். செய்தி வந்ததும்தான் ஓ ஆள் இன்னம் உயிரோடு இருக்கிறார் என முடிவு செய்துகொண்டேன்.

அவரது மகன் குமார் பங்காரப்பா, அவரது விலகலால் காங்கிரசுக்கு இழப்பில்லை என்கிறார். அதிக பட்சம் அவரது இரண்டு வாக்குகள் காங்கிரசுக்கு இழப்பாகலாமாயிருக்கும். குமார் பங்காரப்பா , பங்காரப்பா போலவே அரசியலில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுவிட்ட ஒரு பெரியவரை உதாரணம் காட்டி, ‘’அவரு மாதிரி பேரன் பேத்தியோட சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே இவரு’ என்று ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். சலங்கை கட்டி ஆடிய கால்கள் சும்மாயிருக்குமா.இனி இவரது இழப்பையும் மீறி கர்நாடக காங்கிரசை வலுப்பெறச் செய்யும் பொறுப்பு ராகுல்காந்திக்கு இருக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைக் கொணராமல் தூக்கம் இல்லை எனக்கு என்று சொல்லியிருக்கிறார். இன்னும் கர்நாடகம் போன்ற சில மாநிலங்களையும் பீகாரையும் யோசிக்கும்போது அவரது தூக்கமற்ற நிலையை எண்ணி பயமாயிருக்கிறது.

மனிதன் தூங்காமல் இருந்தால் என்ன ஆகும் என்பது நாம் அறியாததல்ல.ஆனால் பாதகமில்லை. ராகுல் காந்தியை மயக்கங்கள் காப்பாற்றும்.

3 comments:

அசிஸ்டன்ட் டைரக்டர் said...

evvalavu vayasaanaalum arasiyalvaathiyaal oyvaip patri ennip paarkka mudiyaathu ena ninaikkiraen. uthaaranam karunaanithi.. bangarappavukku karunanithiyai vida vayasu kammithaane?

அசிஸ்டன்ட் டைரக்டர் said...

evvalavu vayasaanaalum oru arasiyalvaathiyaal oyvaip patri ennip paarkka kooda mudiyaathu ena ninaikkiraen. uthaaranam karunaanithi.. pakkathulaye uthaaranam irukkuppaa. bangarappavukku karunanithiyai vida vayasu kammithaan enru ninaikkiraen.

அசிஸ்டன்ட் டைரக்டர் said...

evvalavu vayasaanaalum oru arasiyalvaathiyaal oyvaip patri ennip paarkka kooda mudiyaathu ena ninaikkiraen. uthaaranam karunaanithi.. pakkathulaye uthaaranam irukkuppaa. bangarappavukku karunanithiyai vida vayasu kammithaan enru ninaikkiraen.