எரியும் உருகும்
ஒரு பொருள் எனது
இதயமாக இருக்கலாம்.
சுடரில் வடிவுறும் சலனம்
நின் முகமாகும் ஆதலின்
கற்பூரம் கமழ்கிறது
ஆராதனை முற்றத்தெங்கும்.
பற்றற்றுக் கிடந்தேன்
நேற்றது வரை.
நேற்றுப் போகிற போக்கில்
ஓரக்கண் பார்த்து
ஒரு பூப் பூத்தது.
(நன்றி;ஆனந்த விகடன்)
Monday, November 30, 2009
Friday, November 27, 2009
வாழ்த்து...
சர்வ ஏகாதசியில் வந்திருக்கிற இந்த பக்ரீத் குறித்து மகிழ்வோம். இன்று உறக்கம் விழிக்கிற யாவருக்கும் பேரறிவாளன் வீடுபேறு தரட்டும்.
பிரியாணி தருவோரின் பிரியங்கள் மதங்கடந்து வாழ்க.இனிய விழாவினை மனதினில்கொண்டு யாவரும் சந்திப்போம். இனிய வாய்ப்பினை இயற்கை தந்தால் எங்கும் சந்திப்போம்.
பக்ரீத் வாழ்த்துக்கள்.
பிரியாணி தருவோரின் பிரியங்கள் மதங்கடந்து வாழ்க.இனிய விழாவினை மனதினில்கொண்டு யாவரும் சந்திப்போம். இனிய வாய்ப்பினை இயற்கை தந்தால் எங்கும் சந்திப்போம்.
பக்ரீத் வாழ்த்துக்கள்.
ராஜகுமாரனின் ம(ண்)குடம்.
மாதவராஜின் பிளாக்கை நியாயத்துக்கு அப்பாற்பட்ட தாமதத்துடன் முந்தாநாள் படித்தேன்.mathavaraj.blogspot.com. அதில் அவரது முதலாவது (செம்மலர்)சிறுகதையான மண்குடம்- கதையை இட்டிருந்தார்.
அவரது சிறுகதைத் தொகுப்பு ‘ராஜ குமாரன்’ என்றே என் ஞாபகம். மண்குடத்தை விட நல்ல கதைகள் உள்ள அந்தத் தொகுப்பைக்கொண்டு இந்த மாதவராஜ குமாரன் அறியப்பட்டிருக்கலாம். ஆனால், தமிழின் மோனை மோகத்தால் ’மண் குடம் மாதவராஜ்’ என இலக்கியர் பலரால் அறியப்பட்டார்.
நினைவில் மறந்திருந்த மண் குடத்தை மறுபடி படித்தேன். தமிழின் முதாலம் சிறுகதையைப் போன்றதான உத்தியில் மண் குடமே இக்கதையைச் சொல்கிறது.வாயும் வாப்பாடும் உள்ள அந்த வஸ்து கதையில் பேசுவதில் வியப்பில்லை. விக்கிரமாதித்தன் கதைகளில் திரைச்சீலை,தாவணி, புடவை முதலியவை பேசவில்லையா என்ன?
சாதாரண ஆரம்பமாகத் தொடங்குகிற அந்தக்கதை பொதுவாக அல்லது பார்வைக்குத் தெரியும் மேலோட்டத்தளத்தில் தண்ணீர்ப்பஞ்சத்தைப் பேசுகிறது. செண்பகம் தண்ணிக்குப் படுகிற பாட்டைப் பார்த்துவிட்டு ‘தனக்கொரு இறக்கை முளைத்தால் பரவாயில்லை. பறந்து போய் தண்ணீர் கொண்டுவந்து தாகந் தீர்க்கலாம்’ என நினைக்கிற இடத்தில் கதைக்கு நிஜமாகவே இறக்கை முளைக்கிறது.
கடைசியில் நீர்வேண்டிய போராட்டத்தில் குடம் உடைபடும்போது செண்பகத்தைப்பார்த்து கத்த நினைக்கிறது.ஆறு என்கிட்ட எவ்வளவோ சொல்லியிருக்கு.,என்று முடிகிற கதைக்கு முந்தைய இருவரிகள்... அதை எடுத்துவிட்டால் கதை இன்னும் கச்சிதம் பெற்றிருக்கும்.
23ஆண்டுகளுக்கு முன்பு எழுதின கதை என்கிறார் மாதவராஜ்.அப்ப அது அப்படித்தான் இருக்கும். இப்போது எழுதியிருந்தால் தேவையில்லை என நான் நினைத்த கடைசிக்கு முந்தைய இருவரிகளை எழுதியிருக்க மாட்டார்.உங்கள் கண்ணோடு ஒன்று சொல்கிறேன். அந்தக் கதையையே எழுதியிருக்க மாட்டார். இப்பதான் மண்குடம் இல்லியே.
ஆனால் உள்ளே ததும்பும் ஆன்மா இருக்கிறதே அலையடித்துக்கொண்டு.
அவரது சிறுகதைத் தொகுப்பு ‘ராஜ குமாரன்’ என்றே என் ஞாபகம். மண்குடத்தை விட நல்ல கதைகள் உள்ள அந்தத் தொகுப்பைக்கொண்டு இந்த மாதவராஜ குமாரன் அறியப்பட்டிருக்கலாம். ஆனால், தமிழின் மோனை மோகத்தால் ’மண் குடம் மாதவராஜ்’ என இலக்கியர் பலரால் அறியப்பட்டார்.
நினைவில் மறந்திருந்த மண் குடத்தை மறுபடி படித்தேன். தமிழின் முதாலம் சிறுகதையைப் போன்றதான உத்தியில் மண் குடமே இக்கதையைச் சொல்கிறது.வாயும் வாப்பாடும் உள்ள அந்த வஸ்து கதையில் பேசுவதில் வியப்பில்லை. விக்கிரமாதித்தன் கதைகளில் திரைச்சீலை,தாவணி, புடவை முதலியவை பேசவில்லையா என்ன?
சாதாரண ஆரம்பமாகத் தொடங்குகிற அந்தக்கதை பொதுவாக அல்லது பார்வைக்குத் தெரியும் மேலோட்டத்தளத்தில் தண்ணீர்ப்பஞ்சத்தைப் பேசுகிறது. செண்பகம் தண்ணிக்குப் படுகிற பாட்டைப் பார்த்துவிட்டு ‘தனக்கொரு இறக்கை முளைத்தால் பரவாயில்லை. பறந்து போய் தண்ணீர் கொண்டுவந்து தாகந் தீர்க்கலாம்’ என நினைக்கிற இடத்தில் கதைக்கு நிஜமாகவே இறக்கை முளைக்கிறது.
கடைசியில் நீர்வேண்டிய போராட்டத்தில் குடம் உடைபடும்போது செண்பகத்தைப்பார்த்து கத்த நினைக்கிறது.ஆறு என்கிட்ட எவ்வளவோ சொல்லியிருக்கு.,என்று முடிகிற கதைக்கு முந்தைய இருவரிகள்... அதை எடுத்துவிட்டால் கதை இன்னும் கச்சிதம் பெற்றிருக்கும்.
23ஆண்டுகளுக்கு முன்பு எழுதின கதை என்கிறார் மாதவராஜ்.அப்ப அது அப்படித்தான் இருக்கும். இப்போது எழுதியிருந்தால் தேவையில்லை என நான் நினைத்த கடைசிக்கு முந்தைய இருவரிகளை எழுதியிருக்க மாட்டார்.உங்கள் கண்ணோடு ஒன்று சொல்கிறேன். அந்தக் கதையையே எழுதியிருக்க மாட்டார். இப்பதான் மண்குடம் இல்லியே.
ஆனால் உள்ளே ததும்பும் ஆன்மா இருக்கிறதே அலையடித்துக்கொண்டு.
Thursday, November 26, 2009
சின்னப்பிரச்னை
மீராகுமார் சபை நாயகராக இப்போது பாராளுமன்றத்தில் இருக்கிறார். அனேகமாக முதல் பெண் நாயகர் அவர்தான் என்றும் நம்புகிறேன்.
மீராவைப்போன்ற ஒருவர், ’அமைதியாய் இருங்கள் அமைதியாய் இருங்கள்’ என்று சைகை காட்டும்போது நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலும் அமளியும் செய்கின்றனர் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அம்மையார் எதேனும் புதிதாக மதம் ஆரம்பித்தால் நான் அதில் சேர்ந்துவிடுவேன்.அவரது கன்னக் கதுப்புகளைக் கண்டபிறகுதான் பாபு ஜகஜீவன்ராம் அவர்கள் எவ்வளவு அழகு என்பது எனக்கு உறைத்தது.
மும்பைக் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று அத்வானி சுட்டிக்காட்ட பிரணாப்முகர்ஜி இதில் அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்.இதற்கெல்லாம் விலை கொடுக்கவேண்டிவரும் என்று மிரட்டினார்.எதில் எதில் அரசியல் பண்ணுவது என்பதை காங்கிரசாரிடம் பி.ஜே.பி கற்றுக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.அதைவிட , நல்ல ஒளிச்செறிவில் பதிவுக்கருவிகள் முன் பணம் வாங்குவதை நிறுத்தவேண்டும்.
முதலில் தேசியக்கொடியைப் போலவே தோற்றமளிக்கிற கொடியை காங்கிரசிடமிருந்தும், தேசிய மலரான தாமரைச் சின்னத்தை பி.ஜே.பி -யிடம் இருந்தும் அபகரிக்கவேண்டும் என்பது என் ஆவல்.
சீதாராம் கேசரியின் மகன் சீதாராம் யெச்சூரி என்று சொன்னால் நம்பிவிடும் நம் ஜனங்கள் கள்ளுக்கும் பாலுக்கும் வித்யாசம் தெரியாதவர்கள்.இந்த மாதிரி ’குறி’ சமாச்சாரத்தில் எல்லாம் உளவியல் சங்கதிகள் இருக்கிறது. இது புரியாமல் கம்யூனிஸ்டுகள் அரிவாள்,சுத்தி என்றெல்லாம் தேர்ந்தெடுத்தார்கள்.
தமிழ்நாட்டினரிடம் படிக்கவேண்டும் சின்னம் தேர்ந்தெடுப்பதை.இரட்டை இலையைத் தேர்வு செய்த எம்.ஜி.ஆர்தான் எவ்வளவு புத்திசாலி. அண்ணா கண்ட உதய சூரியனை இன்றைக்கு முழுச்சூரியனாக வரைகிற அளவுக்கு தி.மு.க முன்னேறவில்லையா.
வைகோ முதலில் குடை சின்னத்தை தேர்ந்தெடுத்தபோது எங்கள் ஊரில் ஒருவார்.’அருமைடா... ஆள் ஏற்கெனவே கறுப்புச் சால்வை போட்டுருக்கார்.கக்கத்துல குடைய மடக்கிவச்சு ஒரு உடுக்கையும் கையிலெடுத்து ‘நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குதுன்னு போவேண்டீதுதான்’ என்றார். இன்னைக்கு என்ன ஆயிற்று பார்ட்டி பம்பரமாகச் சுத்திக்கொண்டு இருக்கிறார். சாட்டை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.
அவரது குடை மேட்டரில் மகாஜனங்கள் யாரும் உள் அர்த்தம் எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.
விஜயகாந்த் இன்று புதிதாக வந்து கொட்டடா முரசு கொட்டடா என்று நிற்கிறார்.இப்பொழுது தொழில் நுட்பம் அதிகமாகி பிளக்ஸ் பேனர்கள் வந்துவிட்டன. ஆர்வப்பட்ட இளம் ஊழியர்கள் பலரிருந்தாலும் சின்னம் வரைவதற்கெல்லாம் ஆள் போட்டுவிடுகிறார்கள். சுய முயற்சியில் கைப்பழக்கம் இல்லாதவர்கள் வரைந்தால் முரசு ஒரு வடைச் சட்டியைப்போலக் காட்சியளிக்கும்.மூப்பனாரின் சைக்கிள் இன்றைக்கு இருந்திருந்தால் அது ஒரு பைக்காக மாறி இருக்காதா?-மூப்பனார் சுதாரித்து கை இல்லாமல் சைக்கிள் ஓட்ட முடியாது என முடிவெடுத்தார்.
கொஞ்சம் தப்பாக வரைந்தாலும் தம்மை வெளிப்படுத்திக்கொள்கிற சின்னங்கள் சூரியனும் இலையும்தான்.பா.ம.கட்சியின் பழைய யானை - மாயாவதியின் புதிய யானை துதிக்கையை வைத்து கொஞ்சம் தப்பிக்கும். ஆனால் மாம்பழம் கொஞ்சம் குடித்த நிலையில் வரைந்தால் ஆப்பிள் ஆகிவிட வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி நடக்காது. அய்யாவின் கட்சிக்காரர்கள் யாரும் குடிப்பதும் இல்லை. புகைப்பதும் இல்லை.
ஏர் உழவன் சின்னம் இருந்ததாலேயே ஜனதா கட்சி காணாமல் போய்விட்டது என நினைக்கிறேன். உழவர்களே காணாமல் போகும் நாட்டில் சின்னம் மட்டும் இருந்தென்ன போயென்ன.அப்போதெல்லாம் தகரத்தில் ‘சின்ன’த்தை வெட்டிஎடுத்து அச்சு உருவாக்கி அதில் காவி மற்றும் நீலம் கொண்டு வரையும் பழக்கம் இருந்தது. இன்று நெரோலாக்,ஆசியன் பெயிண்ட்களை உபயோகிக்கும் அளவு காஸ்ட்லியாகிவிட்டது.கதிர்-அரிவாள்-சுத்தித் தோழர்கள் மாறிமாறி திராவிடக் கூட்டு போட்டதில் ராச்செலவுக்கு டீயும் பீடியும் கட்டுபடியாகாது என்கிற மனநிலையை தோழர்கள் வந்தெய்தியிருக்கிறார்கள்.
பசுவும் கன்றும் இன்றும் இருந்திருந்தால் காங்கிரஸே இல்லாது போயிருக்கும்.காங்கிரஸ் -ஐ யும் காங்கிரஸ் ‘கை’யும் ஒருசேர பிரியதர்ஷினியால் வந்தது.
மிருகங்களைச் சின்னமாக வைக்க ஏலாது என்று அவரது சின்னமருமகள் பதைபதைத்ததற்கு ஓரளவு பலனும் இருந்தது.கையையே கைக்கொண்ட சோனியா அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
நரி முதலாகிய உயிரிகள் சின்னமாகாதது மோனிகா போன்ற குரல்களால்தான்.எல்லாச் சின்னங்களுக்கு ஊடாகவும் அடுக்குத் தோற்ற(சூப்பர் இம்போஸ்) முறையில் காந்தியின் படத்தைக் காட்டுகிற புதிய முறையை அமலுக்குக் கொண்டுவராவிட்டாலும் பரவலாக்கியதும் இன்று நாடு தழுவப் பரப்பிக்கொண்டிருப்பதும் சின்னத் தேர்வில் பிரதானர்களான தமிழ்நாடுதான். சின்னத்தனமாயினும் தென்னவர்களை மிஞ்ச அவனியில் ஆளில்லை.
மீராவைப்போன்ற ஒருவர், ’அமைதியாய் இருங்கள் அமைதியாய் இருங்கள்’ என்று சைகை காட்டும்போது நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலும் அமளியும் செய்கின்றனர் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அம்மையார் எதேனும் புதிதாக மதம் ஆரம்பித்தால் நான் அதில் சேர்ந்துவிடுவேன்.அவரது கன்னக் கதுப்புகளைக் கண்டபிறகுதான் பாபு ஜகஜீவன்ராம் அவர்கள் எவ்வளவு அழகு என்பது எனக்கு உறைத்தது.
மும்பைக் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று அத்வானி சுட்டிக்காட்ட பிரணாப்முகர்ஜி இதில் அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்.இதற்கெல்லாம் விலை கொடுக்கவேண்டிவரும் என்று மிரட்டினார்.எதில் எதில் அரசியல் பண்ணுவது என்பதை காங்கிரசாரிடம் பி.ஜே.பி கற்றுக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.அதைவிட , நல்ல ஒளிச்செறிவில் பதிவுக்கருவிகள் முன் பணம் வாங்குவதை நிறுத்தவேண்டும்.
முதலில் தேசியக்கொடியைப் போலவே தோற்றமளிக்கிற கொடியை காங்கிரசிடமிருந்தும், தேசிய மலரான தாமரைச் சின்னத்தை பி.ஜே.பி -யிடம் இருந்தும் அபகரிக்கவேண்டும் என்பது என் ஆவல்.
சீதாராம் கேசரியின் மகன் சீதாராம் யெச்சூரி என்று சொன்னால் நம்பிவிடும் நம் ஜனங்கள் கள்ளுக்கும் பாலுக்கும் வித்யாசம் தெரியாதவர்கள்.இந்த மாதிரி ’குறி’ சமாச்சாரத்தில் எல்லாம் உளவியல் சங்கதிகள் இருக்கிறது. இது புரியாமல் கம்யூனிஸ்டுகள் அரிவாள்,சுத்தி என்றெல்லாம் தேர்ந்தெடுத்தார்கள்.
தமிழ்நாட்டினரிடம் படிக்கவேண்டும் சின்னம் தேர்ந்தெடுப்பதை.இரட்டை இலையைத் தேர்வு செய்த எம்.ஜி.ஆர்தான் எவ்வளவு புத்திசாலி. அண்ணா கண்ட உதய சூரியனை இன்றைக்கு முழுச்சூரியனாக வரைகிற அளவுக்கு தி.மு.க முன்னேறவில்லையா.
வைகோ முதலில் குடை சின்னத்தை தேர்ந்தெடுத்தபோது எங்கள் ஊரில் ஒருவார்.’அருமைடா... ஆள் ஏற்கெனவே கறுப்புச் சால்வை போட்டுருக்கார்.கக்கத்துல குடைய மடக்கிவச்சு ஒரு உடுக்கையும் கையிலெடுத்து ‘நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குதுன்னு போவேண்டீதுதான்’ என்றார். இன்னைக்கு என்ன ஆயிற்று பார்ட்டி பம்பரமாகச் சுத்திக்கொண்டு இருக்கிறார். சாட்டை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.
அவரது குடை மேட்டரில் மகாஜனங்கள் யாரும் உள் அர்த்தம் எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.
விஜயகாந்த் இன்று புதிதாக வந்து கொட்டடா முரசு கொட்டடா என்று நிற்கிறார்.இப்பொழுது தொழில் நுட்பம் அதிகமாகி பிளக்ஸ் பேனர்கள் வந்துவிட்டன. ஆர்வப்பட்ட இளம் ஊழியர்கள் பலரிருந்தாலும் சின்னம் வரைவதற்கெல்லாம் ஆள் போட்டுவிடுகிறார்கள். சுய முயற்சியில் கைப்பழக்கம் இல்லாதவர்கள் வரைந்தால் முரசு ஒரு வடைச் சட்டியைப்போலக் காட்சியளிக்கும்.மூப்பனாரின் சைக்கிள் இன்றைக்கு இருந்திருந்தால் அது ஒரு பைக்காக மாறி இருக்காதா?-மூப்பனார் சுதாரித்து கை இல்லாமல் சைக்கிள் ஓட்ட முடியாது என முடிவெடுத்தார்.
கொஞ்சம் தப்பாக வரைந்தாலும் தம்மை வெளிப்படுத்திக்கொள்கிற சின்னங்கள் சூரியனும் இலையும்தான்.பா.ம.கட்சியின் பழைய யானை - மாயாவதியின் புதிய யானை துதிக்கையை வைத்து கொஞ்சம் தப்பிக்கும். ஆனால் மாம்பழம் கொஞ்சம் குடித்த நிலையில் வரைந்தால் ஆப்பிள் ஆகிவிட வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி நடக்காது. அய்யாவின் கட்சிக்காரர்கள் யாரும் குடிப்பதும் இல்லை. புகைப்பதும் இல்லை.
ஏர் உழவன் சின்னம் இருந்ததாலேயே ஜனதா கட்சி காணாமல் போய்விட்டது என நினைக்கிறேன். உழவர்களே காணாமல் போகும் நாட்டில் சின்னம் மட்டும் இருந்தென்ன போயென்ன.அப்போதெல்லாம் தகரத்தில் ‘சின்ன’த்தை வெட்டிஎடுத்து அச்சு உருவாக்கி அதில் காவி மற்றும் நீலம் கொண்டு வரையும் பழக்கம் இருந்தது. இன்று நெரோலாக்,ஆசியன் பெயிண்ட்களை உபயோகிக்கும் அளவு காஸ்ட்லியாகிவிட்டது.கதிர்-அரிவாள்-சுத்தித் தோழர்கள் மாறிமாறி திராவிடக் கூட்டு போட்டதில் ராச்செலவுக்கு டீயும் பீடியும் கட்டுபடியாகாது என்கிற மனநிலையை தோழர்கள் வந்தெய்தியிருக்கிறார்கள்.
பசுவும் கன்றும் இன்றும் இருந்திருந்தால் காங்கிரஸே இல்லாது போயிருக்கும்.காங்கிரஸ் -ஐ யும் காங்கிரஸ் ‘கை’யும் ஒருசேர பிரியதர்ஷினியால் வந்தது.
மிருகங்களைச் சின்னமாக வைக்க ஏலாது என்று அவரது சின்னமருமகள் பதைபதைத்ததற்கு ஓரளவு பலனும் இருந்தது.கையையே கைக்கொண்ட சோனியா அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
நரி முதலாகிய உயிரிகள் சின்னமாகாதது மோனிகா போன்ற குரல்களால்தான்.எல்லாச் சின்னங்களுக்கு ஊடாகவும் அடுக்குத் தோற்ற(சூப்பர் இம்போஸ்) முறையில் காந்தியின் படத்தைக் காட்டுகிற புதிய முறையை அமலுக்குக் கொண்டுவராவிட்டாலும் பரவலாக்கியதும் இன்று நாடு தழுவப் பரப்பிக்கொண்டிருப்பதும் சின்னத் தேர்வில் பிரதானர்களான தமிழ்நாடுதான். சின்னத்தனமாயினும் தென்னவர்களை மிஞ்ச அவனியில் ஆளில்லை.
Wednesday, November 25, 2009
காற்றிலேறி விண்ணை...
இன்று இந்திய வரலாற்றில் குறியீட்டளவில் முக்கியமான நாள்.(25.11.09)இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் போர் விமானம் ஒன்றில் ஏறி முப்பது நிமிடங்கள் பயணித்துவிட்டு வந்திருக்கிறார். விமானத்தின் பெயர் சுகாய் என்பது மாதிரி செய்தி நேரத்தில் காதில் விழுந்தது. இது போன்ற செய்திகளை செய்திகளோடு செய்தியாக இல்லாமல் சிறப்பு ஒளிபரப்பாகச் செய்யவேண்டும்.
இப்படியாக்கொண்ட விமானத்தில் பயணித்த முதலாவது பெண் ஜனாதிபதி அவர்தான் என்கிறார்கள். இதே ஐட்டத்தில் விஞ்ஞானியும் முன்னால் ஜனாதிபதியும் நடுவகிர் கூந்தல் நாயகனும் கனவுக் கண்ணனுமாகிய அப்துல்கலாமும் பயணித்திருக்கிறார்.
அப்துலின் தைரியத்திற்கு இரண்டு சான்றுகள் உள்ளன. ஒருமுறை எல்லையோர விமான நிலையத்தில் மின்சாரம் போய்விட தீப்பந்தங்களை பக்கவாட்டில் கொளுத்தி விமானத்தரைப்பாதை ஓட்டத்திற்குப்பின் மேலேறி தலைநகர் வந்து சேர்ந்தது. இதில் சாகசம் என்னவென்றால் விமானம் மேலேறியபின் ஏதேனும் பிரச்னை என்றால் அந்த விமான நிலையத்தில் தரை இறங்க முடியாது. வாழ்வு துச்சம், மரணம் துச்சம் என அவர்காட்டிய தைரியத்தின் அத்தாட்சி அது.
அதேபோல குஜராத் கலவரத்தின் போது ஜனாதிபதியாக இருந்து நாட்டை திறம்பட- ராஜினாமா செய்யாமல்- பாலித்தது.
பொதுவாக பாரதத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் வயது அளவில் ஏறக்குறைய ரெட்டைக் குழந்தைகள் தோற்றத்தில் இருப்பார்கள்.விதிவிலக்கு ராஜீவ் காந்தி- ஜெயில் சிங் இணை.
கலாமுக்கும் வாஜ்பேயிக்கும் கூட தசாப்த வித்யாசங்கள் உண்டு. இரண்டு பேருமே வெள்ளி முடி கொண்ட ஞானிகள் என்பதால் இருவருக்கும் ஆன பாகுபாடு வெளித்தெரியவில்லை.
அது நிற்க... இன்று பிரதீபா மூதாட்டியை ராணுவ உடைக் கோலத்தில் பார்த்தபோது மகிழ்ந்தேன்.புவியீர்ப்பை கொஞ்சம் கட்டுத்தாங்கும் உடை என்பது அதன் தொழில் நுட்பம்.ஆனால் முதன் முதலாக ஃபேண்ட் அணிந்து ஊடகக் காட்சி தந்த எங்கள் முதன் முதல் , பெண் ஜனாதிபதி.
அக ஊதாக்கதிர்களையும் தாண்டி என் மனமிகப் பறந்து அகமகிழ்கிறேன்.
இப்படியாக்கொண்ட விமானத்தில் பயணித்த முதலாவது பெண் ஜனாதிபதி அவர்தான் என்கிறார்கள். இதே ஐட்டத்தில் விஞ்ஞானியும் முன்னால் ஜனாதிபதியும் நடுவகிர் கூந்தல் நாயகனும் கனவுக் கண்ணனுமாகிய அப்துல்கலாமும் பயணித்திருக்கிறார்.
அப்துலின் தைரியத்திற்கு இரண்டு சான்றுகள் உள்ளன. ஒருமுறை எல்லையோர விமான நிலையத்தில் மின்சாரம் போய்விட தீப்பந்தங்களை பக்கவாட்டில் கொளுத்தி விமானத்தரைப்பாதை ஓட்டத்திற்குப்பின் மேலேறி தலைநகர் வந்து சேர்ந்தது. இதில் சாகசம் என்னவென்றால் விமானம் மேலேறியபின் ஏதேனும் பிரச்னை என்றால் அந்த விமான நிலையத்தில் தரை இறங்க முடியாது. வாழ்வு துச்சம், மரணம் துச்சம் என அவர்காட்டிய தைரியத்தின் அத்தாட்சி அது.
அதேபோல குஜராத் கலவரத்தின் போது ஜனாதிபதியாக இருந்து நாட்டை திறம்பட- ராஜினாமா செய்யாமல்- பாலித்தது.
பொதுவாக பாரதத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் வயது அளவில் ஏறக்குறைய ரெட்டைக் குழந்தைகள் தோற்றத்தில் இருப்பார்கள்.விதிவிலக்கு ராஜீவ் காந்தி- ஜெயில் சிங் இணை.
கலாமுக்கும் வாஜ்பேயிக்கும் கூட தசாப்த வித்யாசங்கள் உண்டு. இரண்டு பேருமே வெள்ளி முடி கொண்ட ஞானிகள் என்பதால் இருவருக்கும் ஆன பாகுபாடு வெளித்தெரியவில்லை.
அது நிற்க... இன்று பிரதீபா மூதாட்டியை ராணுவ உடைக் கோலத்தில் பார்த்தபோது மகிழ்ந்தேன்.புவியீர்ப்பை கொஞ்சம் கட்டுத்தாங்கும் உடை என்பது அதன் தொழில் நுட்பம்.ஆனால் முதன் முதலாக ஃபேண்ட் அணிந்து ஊடகக் காட்சி தந்த எங்கள் முதன் முதல் , பெண் ஜனாதிபதி.
அக ஊதாக்கதிர்களையும் தாண்டி என் மனமிகப் பறந்து அகமகிழ்கிறேன்.
Tuesday, November 24, 2009
அப்யந்திரம்
பெங்களூரு வாழியான ஜகநாதனின் ’காலடி’ இணையதளத்தில் சுற்றிக்கொண்டிருந்தபோது சமீபத்தில் மூச்சா போவது(1) பற்றி எழுதியிருந்தார். கொஞ்சம் ஒருபக்க சிறுகதைகளுக்கான முடிப்பு முடிச்சோடு கட்டுரை நிறைவு பெற்றிருந்தது.நல்ல நகைச்சுவையான பதிவு.அவர் எட்டடி பாய்ந்தால் நாம் பதினாறடி பாய்வது என முடிவு செய்து நம்பர் 2 பற்றி எழுதுவது என முடிவுசெய்துவிட்டேன்.மலம் கழிப்பது பற்றியேதான்.ஆயி,இசா,பீ எனப் பலபேர்களால் மலம் அறியப்படுகிறது.
மலம் என்று எழுதுவது பாமரத்தனத்திலிருந்து புரிந்துகொள்ளக்கூடிய சொல் அல்ல.மலம் ,நிர்மலம் என அது சம்ஸ்கிருத ரேஞ்சில் இருக்கிறது, இந்தக் கட்டுரையின் தலைப்பு போல.நான் ஒட்டன் சத்திரத்தில் இருக்கும்போது -பொது மக்கள் மீதான -மருத்துவாய்வு ஒன்றிற்கு நண்பரொருத்தர் கேள்விப்பட்டி ஒன்று தயாரித்திருந்தார்.அதில் நாளில் எத்தனை முறை மலம் கழிப்பீர்கள் என ஒரு கேள்வி. இதை ஒரு நோயாளியிடம் கேட்டபோது ஏழெட்டு தடவை எனப் பதிலளித்தார். என்ன ஆச்சு உங்களுக்கு என அதிர்ச்சி தெரிவித்தபோது,’’நீங்க ஒன்னுக்கடிக்கிறதத்தான கேக்கறீங்க?’’ என்றார்.
பாரதத்தில் வெளியிடப்படும் கருத்தாய்வு முடிவுகள் மீது அன்றைக்கு முச்சூடும் நம்பிக்கை இழந்தேன். எலெக்சன் ரிசல்ட்டுகள் உட்பட.
கழித்தல் வகையைக் குறிப்பிடுவதற்கு ‘வெளியே போதல்,காட்டுக்குப் போதல்,கொல்லைக்குப் போதல்’ என பல இடக்கரடக்கல் உண்டு. அதனதன் இரட்டுற மொழியும் செயல்பாட்டில் அந்தந்த வட்டாரத்தில் அதற்கான நகைச்சுவைகளை அது உற்பத்திசெய்யும். எங்கள் பக்கத்து ஊர்க் கிழவர் ஒருவர் ஆயி போகும்போது காட்டில் ஏதோ தொடைப்பகுதியில் முள் குத்திவிட பாம்புதான் கடித்துவிட்டது என முடிவு செய்து மருத்துவரிடம் ஓடோடிச் சென்று குப்புறப்படுத்து ஆசனப் பகுதியைக் காட்டினார்.
மருத்துவர், ’போய் கால் கழுவிக்கிட்டு வாங்க!’ என மொழிந்தார்.அந்த அய்யன் பாத்ரூம் போய் காலை மட்டும் கழுவிக்கொண்டு வந்து திரும்ப குப்புறப்படுத்து ....யைக் காட்டினார்.மருத்துவர் அவரது மரணத்தையே விரும்பியிருக்கக் கூடும்.(இந்த இடத்தில் அவரது என்றது யாரைக் குறிக்கிறது)அப்புறம் இடக்கரடக்கலை டாக்டர் விட்டுவிட்டு பச்சையாகக் கட்டளையிட்டார்.
பாம்பு கடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.அந்த இடத்தில் பாம்பு கடித்துச் சாகிறவர்கள் அபூர்வம்.ஏனெனில்...
மலம் என்று எழுதுவது பாமரத்தனத்திலிருந்து புரிந்துகொள்ளக்கூடிய சொல் அல்ல.மலம் ,நிர்மலம் என அது சம்ஸ்கிருத ரேஞ்சில் இருக்கிறது, இந்தக் கட்டுரையின் தலைப்பு போல.நான் ஒட்டன் சத்திரத்தில் இருக்கும்போது -பொது மக்கள் மீதான -மருத்துவாய்வு ஒன்றிற்கு நண்பரொருத்தர் கேள்விப்பட்டி ஒன்று தயாரித்திருந்தார்.அதில் நாளில் எத்தனை முறை மலம் கழிப்பீர்கள் என ஒரு கேள்வி. இதை ஒரு நோயாளியிடம் கேட்டபோது ஏழெட்டு தடவை எனப் பதிலளித்தார். என்ன ஆச்சு உங்களுக்கு என அதிர்ச்சி தெரிவித்தபோது,’’நீங்க ஒன்னுக்கடிக்கிறதத்தான கேக்கறீங்க?’’ என்றார்.
பாரதத்தில் வெளியிடப்படும் கருத்தாய்வு முடிவுகள் மீது அன்றைக்கு முச்சூடும் நம்பிக்கை இழந்தேன். எலெக்சன் ரிசல்ட்டுகள் உட்பட.
கழித்தல் வகையைக் குறிப்பிடுவதற்கு ‘வெளியே போதல்,காட்டுக்குப் போதல்,கொல்லைக்குப் போதல்’ என பல இடக்கரடக்கல் உண்டு. அதனதன் இரட்டுற மொழியும் செயல்பாட்டில் அந்தந்த வட்டாரத்தில் அதற்கான நகைச்சுவைகளை அது உற்பத்திசெய்யும். எங்கள் பக்கத்து ஊர்க் கிழவர் ஒருவர் ஆயி போகும்போது காட்டில் ஏதோ தொடைப்பகுதியில் முள் குத்திவிட பாம்புதான் கடித்துவிட்டது என முடிவு செய்து மருத்துவரிடம் ஓடோடிச் சென்று குப்புறப்படுத்து ஆசனப் பகுதியைக் காட்டினார்.
மருத்துவர், ’போய் கால் கழுவிக்கிட்டு வாங்க!’ என மொழிந்தார்.அந்த அய்யன் பாத்ரூம் போய் காலை மட்டும் கழுவிக்கொண்டு வந்து திரும்ப குப்புறப்படுத்து ....யைக் காட்டினார்.மருத்துவர் அவரது மரணத்தையே விரும்பியிருக்கக் கூடும்.(இந்த இடத்தில் அவரது என்றது யாரைக் குறிக்கிறது)அப்புறம் இடக்கரடக்கலை டாக்டர் விட்டுவிட்டு பச்சையாகக் கட்டளையிட்டார்.
பாம்பு கடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.அந்த இடத்தில் பாம்பு கடித்துச் சாகிறவர்கள் அபூர்வம்.ஏனெனில்...
Monday, November 23, 2009
புதிய பெருமை
தொலைக் காட்சி விளம்பரங்களைப் பற்றி கருத்துப் பகிர்ந்துகொண்டதன் தொடர்ச்சியாக சில பதில்உரைகள் வந்திருந்தன. பின்னும் நண்பனுடன் உரையாடிக்கொண்டிருந்ததில் நிறைய நல்ல விளம்பரங்கள் வருகின்றன என்றும் சில சகிக்க இயலா விளம்பரங்கள் வருகின்றன என்றும் பேசிக்கொண்டிருந்தோம். விரிவாக அவற்றைப்பற்றி எழுதவேண்டிய பொறுப்பை நண்பனிடம் விட்டுவிட்டேன்.
எனக்கு வந்த பதிலுரையில் போத்தீஸ் விளம்பரம் பிடிக்கவில்லை என்று வந்த மடல் நான் ஏற்கெனவே கொண்டிருந்த கருத்துக்கு ஒட்டிவந்ததால் அதைப்பற்றி மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.அந்த விளம்பரம் நொடிக்கு நொடி பிடிக்காமல் போவதற்குத்தான் வாய்ப்பு அதிகம்.
அந்த விளம்பரத்துக்கு வரலாற்று புராண நியாயம் எதாவது இருக்கிறதென்றால் இருக்கிறது.கூந்தலுக்கு மணம் உண்டா என்ற மிகப்பெரிய ஆராய்ச்சி மன்னனுக்கு வந்துவிடுகிறது. நாடாள்வதை விட்டுவிட்டு கூந்தலில் மீன் பிடிக்கிற மென்மனத்தை அவனது பெயர்தான் அவனுக்கு வழங்கியிருக்கவேண்டும்.செண்பகப்பாண்டியன்.என்ன மணமான பெயர். அந்த மணமான மனமான ஆண் அரசன் மனைவியின் கூந்தலை நுகர்ந்துவிட்டு (வாடிக்கையாளர் மாதிரி தோன்றுகிறது என்றால் முகர்ந்துவிட்டு என்று படித்துக்கொள்ளவும்), பாட்டேலே பதில் சொல்ல புலவர்களை அழைக்கிறான்.
மதுரை மாமன்னருக்கு மாபெரும் பிரச்சினையில் மாபெரும் சந்தேகம் எழுந்துள்ளது என்கிறது தண்டோரா. பரிசு அற்பசொற்பம் அல்ல. ஆயிரம் பொற்காசுகள்.
தருமிக்கு சிவன் கோஸ்ட் ரைட்டர். கடையில் சண்டை (வெம்மைதாளாது) பொற்றாமரைக்குளத்தில் நக்கீரன் விழுவது வரை போகிறது. மூன்றாம் கண் திறப்பு வரை இந்தப் பிரச்சினை போகுமென்றால் செண்பகன் மனைவிக்கு நீலிபிருங்காதி அல்லது அஸ்வினி வாங்கிக்கொடுத்திருப்பான். போத்தீஸ் விளம்பரத்தில் மதுரை என்றதும் மதலில் எனக்கு தோன்றியது செண்பகப் பாண்டியின் நினைப்புதான்.
போத்தீஸுக்கும் மதுரை விளம்பர உத்தியாகத் தோன்றியதன் காரணம் கடை மதுரையில் (அடுக்கிப்பிறகு) விரிப்பதால்தான். அப்புறம் விளம்பரத்தின் பாத்திரத் தேர்வுகள். ஒரு நாற்பத்தி ஐந்து பட்டுப் புடவையைப் பார்த்ததும் (சந்தோஷமாக) கஜானா காலியாகிவிட்டதா எனக் கேட்கிற அரசன். இது சத்தியராஜ்.மதுரைக்கு வாய்க்கிற மன்னர்கள் எப்பவும் இப்படிக் கூமுட்டையாகவே இருக்கிறார்களே என வருந்தினேன். அறியப்பட்ட புல அளவில் அவர் மதுரை மன்னரோ மதுரை மண்ணரோ அல்ல. பிறகு ஆந்திர சீதா அரசி.அவருக்கு அடுக்கிய கையிலிருந்து ஒவ்வொரு புடவையாக எடுத்துத்தர சத்யராஜ் படுகிற பாட்டை நீங்கள் பார்க்கவேண்டும்.
மந்திரி எம்.எஸ்.பாஸ்கர். சரியான ஆளிடம் மந்திரியாக இருப்பதான தோற்றம் அவரது முக மிளிர்வில் இருக்கிறது. கஜானா ,மகாராணி, நாடு எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன் மன்னா! இன்னிக்கு மத்யான சாப்பாடு அம்மா மெஸ்ஸா,மாமி மெஸ்ஸா? என்பது போன்ற பாவம் அவருக்கு.அரசனும் அரசியும் இணைந்து அவர்களது ஓங்குதாங்குக்குக் குறைவில்லாத ஒரு இளவரசியை வேறு பெத்துப்போட்டுவிட்டார்கள்.
மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை என்கிற வாக்கியம் அந்த அழகிய சின்னப்பெண்ணால் எனக்கு ஆழத்திலிருந்து நினைவுக்கு வந்தது.
போத்தீஸ் என்றால் எதோ மலையாளவகைப் பேர் என்று நினைக்கிறேன்.போத்து என்றால் மலையாளத்தில் என்னவென்று தெரியவேண்டும். யாரெங்ஙிலு சகாயிக்கூ!
மதுரையின் மலைமலையான பல பெருமைகளைப் பார்த்ததால் விளம்பரத்தின் மீதான கோபம் தீர்ந்து போத்தீசுக்குப் போனேன். பழைய வருத்தங்கள் பறந்தோடிப்போகட்டும் என ஹேமமாலினியைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
வஸ்தரகலா- ராணி.
வடக்கும் தெற்கும் சேர்ந்த கவலை.
எனக்கு வந்த பதிலுரையில் போத்தீஸ் விளம்பரம் பிடிக்கவில்லை என்று வந்த மடல் நான் ஏற்கெனவே கொண்டிருந்த கருத்துக்கு ஒட்டிவந்ததால் அதைப்பற்றி மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.அந்த விளம்பரம் நொடிக்கு நொடி பிடிக்காமல் போவதற்குத்தான் வாய்ப்பு அதிகம்.
அந்த விளம்பரத்துக்கு வரலாற்று புராண நியாயம் எதாவது இருக்கிறதென்றால் இருக்கிறது.கூந்தலுக்கு மணம் உண்டா என்ற மிகப்பெரிய ஆராய்ச்சி மன்னனுக்கு வந்துவிடுகிறது. நாடாள்வதை விட்டுவிட்டு கூந்தலில் மீன் பிடிக்கிற மென்மனத்தை அவனது பெயர்தான் அவனுக்கு வழங்கியிருக்கவேண்டும்.செண்பகப்பாண்டியன்.என்ன மணமான பெயர். அந்த மணமான மனமான ஆண் அரசன் மனைவியின் கூந்தலை நுகர்ந்துவிட்டு (வாடிக்கையாளர் மாதிரி தோன்றுகிறது என்றால் முகர்ந்துவிட்டு என்று படித்துக்கொள்ளவும்), பாட்டேலே பதில் சொல்ல புலவர்களை அழைக்கிறான்.
மதுரை மாமன்னருக்கு மாபெரும் பிரச்சினையில் மாபெரும் சந்தேகம் எழுந்துள்ளது என்கிறது தண்டோரா. பரிசு அற்பசொற்பம் அல்ல. ஆயிரம் பொற்காசுகள்.
தருமிக்கு சிவன் கோஸ்ட் ரைட்டர். கடையில் சண்டை (வெம்மைதாளாது) பொற்றாமரைக்குளத்தில் நக்கீரன் விழுவது வரை போகிறது. மூன்றாம் கண் திறப்பு வரை இந்தப் பிரச்சினை போகுமென்றால் செண்பகன் மனைவிக்கு நீலிபிருங்காதி அல்லது அஸ்வினி வாங்கிக்கொடுத்திருப்பான். போத்தீஸ் விளம்பரத்தில் மதுரை என்றதும் மதலில் எனக்கு தோன்றியது செண்பகப் பாண்டியின் நினைப்புதான்.
போத்தீஸுக்கும் மதுரை விளம்பர உத்தியாகத் தோன்றியதன் காரணம் கடை மதுரையில் (அடுக்கிப்பிறகு) விரிப்பதால்தான். அப்புறம் விளம்பரத்தின் பாத்திரத் தேர்வுகள். ஒரு நாற்பத்தி ஐந்து பட்டுப் புடவையைப் பார்த்ததும் (சந்தோஷமாக) கஜானா காலியாகிவிட்டதா எனக் கேட்கிற அரசன். இது சத்தியராஜ்.மதுரைக்கு வாய்க்கிற மன்னர்கள் எப்பவும் இப்படிக் கூமுட்டையாகவே இருக்கிறார்களே என வருந்தினேன். அறியப்பட்ட புல அளவில் அவர் மதுரை மன்னரோ மதுரை மண்ணரோ அல்ல. பிறகு ஆந்திர சீதா அரசி.அவருக்கு அடுக்கிய கையிலிருந்து ஒவ்வொரு புடவையாக எடுத்துத்தர சத்யராஜ் படுகிற பாட்டை நீங்கள் பார்க்கவேண்டும்.
மந்திரி எம்.எஸ்.பாஸ்கர். சரியான ஆளிடம் மந்திரியாக இருப்பதான தோற்றம் அவரது முக மிளிர்வில் இருக்கிறது. கஜானா ,மகாராணி, நாடு எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன் மன்னா! இன்னிக்கு மத்யான சாப்பாடு அம்மா மெஸ்ஸா,மாமி மெஸ்ஸா? என்பது போன்ற பாவம் அவருக்கு.அரசனும் அரசியும் இணைந்து அவர்களது ஓங்குதாங்குக்குக் குறைவில்லாத ஒரு இளவரசியை வேறு பெத்துப்போட்டுவிட்டார்கள்.
மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை என்கிற வாக்கியம் அந்த அழகிய சின்னப்பெண்ணால் எனக்கு ஆழத்திலிருந்து நினைவுக்கு வந்தது.
போத்தீஸ் என்றால் எதோ மலையாளவகைப் பேர் என்று நினைக்கிறேன்.போத்து என்றால் மலையாளத்தில் என்னவென்று தெரியவேண்டும். யாரெங்ஙிலு சகாயிக்கூ!
மதுரையின் மலைமலையான பல பெருமைகளைப் பார்த்ததால் விளம்பரத்தின் மீதான கோபம் தீர்ந்து போத்தீசுக்குப் போனேன். பழைய வருத்தங்கள் பறந்தோடிப்போகட்டும் என ஹேமமாலினியைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
வஸ்தரகலா- ராணி.
வடக்கும் தெற்கும் சேர்ந்த கவலை.
Subscribe to:
Posts (Atom)
