Tuesday, October 4, 2011

சூர்ப்பணங்கு - பெங்களூரில் 6.10.2011

ச. முருக பூபதியின் சூர்ப்பணங்கு என்னும் அரங்க நிகழ்வு 06.10.2011 (வியாழக் கிழமை) மாலை ஆறு மணியளவில் பெங்களூரு டவுன்ஹால் அருகில் உள்ள ‘ரவீந்திர கால க்ஷேத்ரா’வில் நடைபெற உள்ளது.

முருகபூபதியின் வனத்தாதி உள்ளிட்ட முந்தைய ஆக்கங்களைப் பார்த்துள்ளேன். வித்யாசமான அனுபவங்களைத் தரக்கூடியது அவரது நாடகங்கள். தொன்மங்களும் சமகால அல்லது காலகால விஷயங்கள் மயமயப்பான ஒலி நடை முன்புலத்தில் நடைபெறக்கூடியது. சூர்ப்பணங்கினை நானும் பார்க்காததால் ஆவலுடன் இருக்கிறேன் இந்த நிகழ்ச்சிக்காக. நாடகம் பார்த்துவிட்டுத்தான் எழுதவேண்டும்.

பெங்களூர் வாழ்வோரும் அல்லது பெங்களூரை பயண தூரத்தில் எட்டுவதற்கு சாத்தியம் உள்ளவர்களும் கண்டு துய்க்கலாம். கூடுதல் விவரங்கள் அறிய எனது அலைபேசி எண் ; 08050444267.

Saturday, October 1, 2011

இருட்டைச் சூழச் செய்யுதல்

தன் பிரவாகத்திலேயே
ஆதியின் கூற்றில் இருள்
இருந்தது.
படர்ந்தது கனியின் ஒளி
இருப்பிடமறியாத் தேடலினூடே
உயர் துயர் உயிர் தவித்துக்
கண்டடைந்தது நெருப்பினை.
பொருப்பிலும் இருப்பிலும்
தானிருந்த ஒன்றை
கடைந்துரசும் கடுமுயல்வில்
நிலைத்த அது குமிழிற் சேகரமானது.
குமிழிலும் குழலிலும் சேகரமான அதை
மூலத்தின் விருப்ப வேர் தேடி
அணைக்க விரும்புகிறது
அதி ஆதி மனம்.
எதை எதைக் கொண்டு
ஒளியை அணைய.... என
இருட்டில் தவிக்கிறது
இன்றைய மனம்.