Wednesday, June 30, 2010
கிளிகள்....
நூறாம் நூறாம் கிளிக்கணக்கில் முப்பத்தாறு கிளிகள் என பதில் சொன்ன இர்ரண்டு பேருக்கு நன்றி.
Friday, June 25, 2010
நூறு எப்பதான் ஜகன் வரும்.
கால் பந்தில் கோல்களின் எண்ணிக்கையை மனதில் வைக்காமல் ஆடுவது. இறக்கையுள்ள அரைப்பந்தில் ( ஷட்டில் காக் ) பாயிண்டுகளை மனங்க்கொள்ளாமல் ஆடுவது. பழைய (அதிலும் பழைய) காவஸ்கரைப் போல போர்டைப் பார்க்காமலே செஞ்சுரியைக் கடந்துவிடுவது இப்படியெல்லாம் நடந்து விடுதல் நல்லதுதான்.
நான் பிளாக்கின் ‘100’ போஸ்ட்ஸ் என்பதை நம்பித்தான் நூறைக் கடந்துவிட்டதாக நம்பினேன். கணக்கு தவறு என்கிறார் ’காலடி’யார் ஜகன்.
சரி நூறு வரும்போது வரட்டும். அதற்கு முன் 100 பற்றிய சிறு புதிர்.
ஒரு கிளிக்கூட்டம் பறந்துபோகிறது. பறக்கும் அவற்றைப் (அவைகளை அல்ல - செம்மொழிக் குறிப்பு) பார்த்து ஒருவர் கேட்கிறார்.
‘நூறாம் நூறாம் கிளிகளே எங்கே போறீங்க?’
அதற்கு ஒரு கிளி சொன்ன பதில் இப்படி.
‘நாங்க நூறு பேர் அல்ல. நாங்களும் எங்களொத்த இனமும் எங்களிற் பாதியும் பாதியில் பாதியும் உன்னையும் சேர்த்தால்தான் நூறு’
அப்படியானால் பறந்த கிளிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதை சரியாகச் சொல்வோர் ‘செம்மொழிக் கணக்க்கர்’ விருதும் பட்டயமும் பெறுகிறார். மற்றபடி அவருக்கு சிறப்பாக கூடுதலாக ஒரு கேள்வி தரப்படும். அந்தக் கேள்வி அமைந்திருக்கும் விதம் இப்படி.
13 -ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை ஒரு மாநாடு என்றால், அந்த மாநாடு ‘முடிய’ வேண்டியது எப்போது?
நான் பிளாக்கின் ‘100’ போஸ்ட்ஸ் என்பதை நம்பித்தான் நூறைக் கடந்துவிட்டதாக நம்பினேன். கணக்கு தவறு என்கிறார் ’காலடி’யார் ஜகன்.
சரி நூறு வரும்போது வரட்டும். அதற்கு முன் 100 பற்றிய சிறு புதிர்.
ஒரு கிளிக்கூட்டம் பறந்துபோகிறது. பறக்கும் அவற்றைப் (அவைகளை அல்ல - செம்மொழிக் குறிப்பு) பார்த்து ஒருவர் கேட்கிறார்.
‘நூறாம் நூறாம் கிளிகளே எங்கே போறீங்க?’
அதற்கு ஒரு கிளி சொன்ன பதில் இப்படி.
‘நாங்க நூறு பேர் அல்ல. நாங்களும் எங்களொத்த இனமும் எங்களிற் பாதியும் பாதியில் பாதியும் உன்னையும் சேர்த்தால்தான் நூறு’
அப்படியானால் பறந்த கிளிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதை சரியாகச் சொல்வோர் ‘செம்மொழிக் கணக்க்கர்’ விருதும் பட்டயமும் பெறுகிறார். மற்றபடி அவருக்கு சிறப்பாக கூடுதலாக ஒரு கேள்வி தரப்படும். அந்தக் கேள்வி அமைந்திருக்கும் விதம் இப்படி.
13 -ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை ஒரு மாநாடு என்றால், அந்த மாநாடு ‘முடிய’ வேண்டியது எப்போது?
நிலா நாற்பது - 5
கீழ் நோக்கு மேல் நோக்கு
உரைப்பது நாட்காட்டிகளின்
பகற்பொய்.நிலா வரும்
இரவெலாம் மேல்நோக்கு நாட்களே.
உரைப்பது நாட்காட்டிகளின்
பகற்பொய்.நிலா வரும்
இரவெலாம் மேல்நோக்கு நாட்களே.
Friday, June 4, 2010
என்னவாகிறது இவ்விரவுக்கு...
நமக்குத் தூக்கம் வராமலிருக்கையில்
இவ்விரவுக்குப்
பைத்தியம் பிடித்துவிடுதல் உசிதம்.
நமக்குப் பைத்தியம் பிடித்து
விடுதல்
இவ்வுலகுக்கு நன்மை.
தவிர்க்கமுடியா
தவிப்பின் நனவில் உள்ளத்து
உடன்
இருப்பவர்கள் எல்லாம் விழித்தவாறே
உடனிருத்தல் நலமே நலம்.
பிரக்ஞை தெளியுமுன் வாக்குமூலங்களைக்
கொடுத்துவிடுதல்
உயிரின் விருப்பமாயும்
பேசும் வார்த்தைக்கு வருந்துதல்
பிழைப்பின் வருத்தமாகவும் இருக்கிறது.
பேதலிப்பின் நிலைகள் உணர்ந்த
பின்னும்
உண்மையறியாமல் தெளிவை
நிலை நாட்ட விழைகிறது
விடுபடாத ஒன்று.
அனைத்திலிருந்தும் விடுபடாத ஒன்று
ஒன்றிலிருந்தும் கூட
விடுபடப் போவ தில்லை.
இவ்விரவுக்குப்
பைத்தியம் பிடித்துவிடுதல் உசிதம்.
நமக்குப் பைத்தியம் பிடித்து
விடுதல்
இவ்வுலகுக்கு நன்மை.
தவிர்க்கமுடியா
தவிப்பின் நனவில் உள்ளத்து
உடன்
இருப்பவர்கள் எல்லாம் விழித்தவாறே
உடனிருத்தல் நலமே நலம்.
பிரக்ஞை தெளியுமுன் வாக்குமூலங்களைக்
கொடுத்துவிடுதல்
உயிரின் விருப்பமாயும்
பேசும் வார்த்தைக்கு வருந்துதல்
பிழைப்பின் வருத்தமாகவும் இருக்கிறது.
பேதலிப்பின் நிலைகள் உணர்ந்த
பின்னும்
உண்மையறியாமல் தெளிவை
நிலை நாட்ட விழைகிறது
விடுபடாத ஒன்று.
அனைத்திலிருந்தும் விடுபடாத ஒன்று
ஒன்றிலிருந்தும் கூட
விடுபடப் போவ தில்லை.
Thursday, June 3, 2010
நட்பினை யோசித்தல்...
நட்பு பற்றி ,நட்பின் சுகம் (அ-(காதலின் சுகம்) பற்றி யோசிக்கும் போதெல்லாம் என் நண்பன் ஒருவன் அவனது கல்லூரி முதலாமாண்டுக் காலத்தில் சமவயது மாணவியுடன் நிகழ்த்திக்கொண்ட பரிவர்த்தனை நினைவுக்கு வருகிறது.எண்பத்தைந்தாம் வருடங்களில் அவர்களுக்கு இடையே நடந்துகொண்ட எழுத்துரையாடலைக் காணும் போது இப்போதும் எனக்கு வியப்பு மேலிடுகிறது. அப்புறம் அவர்கள் பிரிந்தார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். காதலினும் பெரிது உலகு.
நண்பன் ஒரு ஊடல் சமயத்து காதலிக்கு எழுதிய கடிதம் இப்படி:
மறந்து விடுவதை விட எப்படியும் தண்டித்துவிட முடியாது. தண்டித்துவிடாமல் எதுவும் செய்க.
பெண்ணின் பதில் : ‘நீ என் சுவாசம்.”
(சுவாசத்தை நினைவு வைத்துக்கொண்டிருப்பதில்லை என்பது உட்கிடை)
நண்பன் பதில் : ‘நான் உன் குளத்து மீன் மறுபடியும் தூண்டில் போடாதே.’
ஆக இவ்வாறாயிருந்தன காரியங்கள்.இருக்கின்றனவும் கூட காரியங்கள். நட்பின் களிபேருவகையும் இணையொரு வகையும் நானறிய வேறில்லை என்றபோதும் நரம்பும் ஆன்மாவும் தளர்வுற்றிருக்கிற சமயங்களில் எது ஒன்றும் பொருட்படத் தக்கதாகக் காணாமல் சாவின் நலிவை முத்தமிட முனைகிறேன்.
மற்றபடிக்கு நூறாம் பதிவின் பின்னூட்டமிட்டுக் கிளர்த்தி மலர்த்திய ஆதிரனுக்கு இதில் வரும் பெண்ணின் பதில் எப்போதும் உண்டு. ஆதிரனைப் படிக்கையில் நான் என்னளவில் தத்துவ விசாரணையைத் தனி விசாரணையாகக் குறுக்குவதை உணர்கிறேன்.
நண்பன் ஒரு ஊடல் சமயத்து காதலிக்கு எழுதிய கடிதம் இப்படி:
மறந்து விடுவதை விட எப்படியும் தண்டித்துவிட முடியாது. தண்டித்துவிடாமல் எதுவும் செய்க.
பெண்ணின் பதில் : ‘நீ என் சுவாசம்.”
(சுவாசத்தை நினைவு வைத்துக்கொண்டிருப்பதில்லை என்பது உட்கிடை)
நண்பன் பதில் : ‘நான் உன் குளத்து மீன் மறுபடியும் தூண்டில் போடாதே.’
ஆக இவ்வாறாயிருந்தன காரியங்கள்.இருக்கின்றனவும் கூட காரியங்கள். நட்பின் களிபேருவகையும் இணையொரு வகையும் நானறிய வேறில்லை என்றபோதும் நரம்பும் ஆன்மாவும் தளர்வுற்றிருக்கிற சமயங்களில் எது ஒன்றும் பொருட்படத் தக்கதாகக் காணாமல் சாவின் நலிவை முத்தமிட முனைகிறேன்.
மற்றபடிக்கு நூறாம் பதிவின் பின்னூட்டமிட்டுக் கிளர்த்தி மலர்த்திய ஆதிரனுக்கு இதில் வரும் பெண்ணின் பதில் எப்போதும் உண்டு. ஆதிரனைப் படிக்கையில் நான் என்னளவில் தத்துவ விசாரணையைத் தனி விசாரணையாகக் குறுக்குவதை உணர்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)
