Sunday, August 1, 2010

அய்ய.... மின்சாரமுங்க மின்சாரம்...

உலக நட்பு தினம் ஒரு புறத்தில் இருந்தாலும் உலக நடப்பு தினம் என ஒன்று இருக்கிறதல்லவா?அதன் படிக்கு இன்றைக்குத் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறது. புள்ளிவிவரங்கள் நமக்கு ஆகாது எப்பவுமே. இந்த உயர்வு எனப்படுவது சர்வமட்டதிலும் அல்லாமல் வரையறுக்கப்பட்ட அளவுகளில் இருக்கிறது. வீடுகளுக்கு அறுநூறு யூனிட்டுக்குமேல் ஓடும் போது யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கூடுகிறது. இந்த எண்ணிக்கை முதலாவது யூனிட்டிலிருந்தே கணக்காகும் என்றே நினைக்கிறேன். மின்சாரக் கண்ணன்கள் பின்னூட்டமிட்டு ஐயந் தீர்க்கலாம்.

செய்தி வெளியாகிவிட்டது.பொதுவாக செய்தி தரப்படும் (தரப்    படும்!) போது இரு மாதத்துக்கு என்பதாக அல்லாமல் மாதாந்தரம் என்கிற தொனியிலேயே தெரிவிக்கப்படுகின்றன.இது நம் செய்தியியல் பற்றாக்குறை. கோளாறு. பள்ளிக்கூடங்கள்,தொழில் நிறுவனங்களுக்கும் தொகை கூடுகிறது. தொழில்கள் பற்றிய புரிதல்கள் இல்லாவிட்டாலும் கல்விக் கூடங்களுக்கு ஏற்றியது பற்றி எனக்குக் கேள்வியில்லை. நிர்வாகம் அதனால் தளர்வுறப் போவதில்லை. இதையுங் காரணங்காட்டி குழந்தைகளுக்கு மாதம் பத்தோ இருபதோ ஃபீசு கூட்டப்போகிறார்கள் அவ்வளவே.

ஒரே செய்தியை சன்னிலும் கலைஞரிலும் ஜெயாவிலும் மக்களிலும் பொதிகையிலும் கேட்கும்போது விஷயத்தின் பன்முகத் தன்மையை உணரலாம். சித்தரிப்பில் ஜெயா டி.வி க்கு தனித்தன்மை உண்டு. தனித் தன்மையை மெருகேற்ற  ஃபாத்திமா பாபு.நடுத்தர வர்க்கத்தை இந்த மின் கட்டணம் கடுமையாகப் பாதிக்கிறது என்றவுடன் பொதுஜனப் பெண்மணி ஒருவர் தோன்றி பிளந்து கட்டினார். அவரது ஆவேசத்தை அடுத்து எனக்குத் தோன்றிய ஆச்சரியம். ’தமிழகத்தில் நடுத்தரக் குடும்பங்கள் அறுநூறு யூனிட்டைத் தாண்டி உபயோகிக்கிறார்களா... வாரே வாவ்’ என்பதுதான்.

வாயுருளி, உருளித் திரவம் இப்படி எவ்வளவோ பாத்தாச்சு இந்தக் கட்டண ஏற்றத்தை ...ப்பூ....துவரம் பருப்பூ... என்று ஊதித்தள்ளிவிட மாட்டோமா? விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இன்னும் இலவச மின்சாரம்? அவர்களுக்கும் விரைவில் கட்டணம் அமலாக்கவேண்டும்.

வெள்ளைக் குதிரையேறி கல்கி வருகிற கோலம் பார்க்க ஆசையிருக்காத என்ன இந்த இருண்ட மனதுக்கு?

1 comment:

gautam said...

சரிதான்!!